Published : 07 Sep 2021 03:14 AM
Last Updated : 07 Sep 2021 03:14 AM

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் - டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி :

கடலூர்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல் பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசபயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி வகுப்புகளாக நடைபெறுகின்றன.

இந்த வகுப்புகள் கடந்த 1-ம் தேதி முதல் வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இவ்வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து, வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

தற்போது குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி வகுப்புகளாக நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x