Published : 06 Sep 2021 03:15 AM
Last Updated : 06 Sep 2021 03:15 AM

பைக்கிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு :

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள மேட்டுப்பெருமாள் நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி கவிதா (38). இவர்களது மகன் தனுஷ் (18). நேற்று கவிதா, தனுஷ் இருவரும் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த பைக்கில் சென்றனர். மதுரை-திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் விராலிப்பட்டி விலக்கில் வேகத் தடையைத் கடக்கும்போது பைக்கிலிருந்து கவிதா கீழே விழுந்தார். இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x