Published : 04 Sep 2021 03:15 AM
Last Updated : 04 Sep 2021 03:15 AM
நூறு சதவீத தடுப்பூசி போடும் இலக்கை எட்டுவதற்கு மதுரை நகரில் வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மாநக ராட்சி சுகாதாரத் துறைப் பணி யாளர்கள் தொடங்கினர்.இந்த நடவடிக்கை பெண்கள், மூத்த குடிமக்களிடையே பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளது.
மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையங்கள், கிராமப்புற சுகாதார நிலை யங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 11 லட்சத்து 19 ஆயிரத்து 235 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மாநகராட்சியில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் சுமார் 15 லட்சம் மக்கள் வசிப்பதால் அனைவருக்கும் தடுப்பூசி போட்டால் மட்டுமே கரோனா தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதனால், 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்ட அரசு ராஜாஜி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்குக் கூடுதல் தடுப்பூசிகளை சுகாதாரத் துறையிடம் மாநகராட்சி கேட்டுப் பெற்றுள்ளது.
மேலும், 100 பேருக்கு மேல் தடுப்பூசி தேவைப்படும் குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவக் குழுவினர் முகாம் போட்டு தடுப்பூசி போடுகின்றனர்.
இந்நிலையில், நேற்று முதல் மாநகராட்சியின் 4 மண் டலங்களிலும் மண்டலத்துக்கு ஒரு வார்டு வீதம் தேர்வு செய்து மொத்தம் 4 வார்டுகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலைய செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப் பூசி போடும் பணியைத் தொடங்கி உள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் கூறுகையில், ‘‘முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து தடுப்பூசி போடுவதில் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் பரிசோதனை அடிப்படையில் 4 வார்டுகளில் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிட்டுள்ளோம். பொதுமக்கள் ஒத்துழைப்பைப் பொருத்து அனைத்து வார்டுகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவோம்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT