Published : 04 Sep 2021 03:15 AM
Last Updated : 04 Sep 2021 03:15 AM

விநாயகர் சதுர்த்தி விழா குறித்து - திண்டுக்கல்லில் ஆலோசனை கூட்டம் :

விநாயகர் சதூர்த்தி விழா குறித்த இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. வி.ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி.கள் வெள்ளைச்சாமி, சந்திரன், டி.எஸ்.பி.கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்து அமைப்புக்களின் சார்பில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ், சிவசேனா நிர்வாகி பாலாஜி, இந்து மக்கள் கட்சி நிர்வாகி தர்மா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் கூட்டத்தில் பங்கேற்றனர். அரசு உத்தரவுப்படி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறித்து போலீஸார் தெரிவித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி நிர்வாகிகள், விநாயகர் சதூர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கம்போல் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக போலீஸாரிடம் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x