Published : 30 Aug 2021 03:14 AM
Last Updated : 30 Aug 2021 03:14 AM

குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது :

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் முத்துக்குமார் நகரில் கடந்த மாதம் பூட்டிய வீட்டை உடைத்து நகைகளை திருடிய வழக்கில், சிவகங்கையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. வி.ஆர். சீனிவாசன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதேபோல, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பர்னிச்சர் கடை உரிமையாளர் மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய சுந்தரபாண்டி, சத்தியமூர்த்தி, அன்பழகன் ஆகியோரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி பரிந்துரைத்தார். இதையடுத்து நான்குபேரையும் ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x