Published : 13 Aug 2021 03:18 AM
Last Updated : 13 Aug 2021 03:18 AM

குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான : ஊட்டச்சத்து தாய்ப்பாலில் கிடைக்கிறது : ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தாய்ப்பாலில் இருந்தே கிடைக் கிறது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை யொட்டி கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகள் பராமரிப்பு, தாய்ப்பால் அவசியம் குறித்த கண் காட்சியை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் தொடங்கி வைத் ததுடன், தாய்ப்பால் வார விழா உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசும் போது, ‘‘குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் தாய்ப்பால் மூலம் கிடைக்கிறது. மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களில் கர்ப் பிணிகளுக்கு தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாவட்டத்தில் உள்ள பெண்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். நரிக் குறவர்கள், நாடோடிகள், பூம் பூம் மாடு வைத்து பிழைப்பு நடத்தி வருபவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களிடம் தாய்ப்பாலின் அவசியம் குறித்து விளக்க வேண்டும். அடுத்த தலை முறையினர் ஆரோக்கியமுடன் வாழ விழிப்புணர்வு பணிகளை அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிமாறன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் வாசுகி, தேன்மொழி, பகவதி, ஷாலினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x