Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM

போக்ஸோ சட்டத்தில் ஆசிரியர் கைது :

தென்காசி

ஆலங்குளம் அருகே உள்ள சோலைசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் இலங்காமணி (36). இவர், ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

தனது மாட்டுக்கு வைக்கோல் எடுக்கச் சென்றபோது, அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த14 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.

இதனால் அந்த சிறுமி கூச்சலிடவே, உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று, இலங்காமணியை பிடித்து ஊத்துமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இலங்காமணியை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x