Published : 12 Jul 2021 03:13 AM
Last Updated : 12 Jul 2021 03:13 AM

என்எல்சி தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தனர் :

கடலூர்

என்எல்சி சொசைட்டி – ஒப்பந்த தொழிலாளர்கள் உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் 24 ம் தேதி வேலை நிறுத்தம் என அறிவிப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர்.

என்எல்சி ஜீவா தொழிலாளர் சங்கம், என்எல்சி வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், மூவேந்தர் ஒப்பந்த தொழிலாளர் சங்கம், திராவிட தொழிலாளர் ஒப்பந்த தொழிலாளர் சங்கம், நாம் தமிழர் தொழிற்சங்கம் ஆகிய தொழிற் சங்கங்கள் ஒருங்கிணைந்து என்எல்சி சொசைட்டி-ஒப்பந்த தொழிலாளர்கள் உரிமைமீட்பு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளனர்.

இந்த கூட்டமைப்பினர், சொசைட்டி - ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்தல், சம வேலைக்கு சம ஊதியம், 3 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் இணைத்தல், பணிமூப்பு பட்டியலில் விடுபட்டவர்களை சேர்த்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரியும் அன்மையில் என்எல்சி தலைமை அலுவலகத்தில் வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸை அளித்தனர்.முன்னதாக இது குறித்து விளக்கக் கூட்டம் பெரியார் சதுக்கத்தில் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x