Published : 10 Jul 2021 03:15 AM
Last Updated : 10 Jul 2021 03:15 AM

கர்ப்பிணிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் :

தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் கூறியி ருப்பதாவது: கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களின் உடல்நிலை பாதிப்பதோடு மட்டுமின்றி சிசுவும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிலருக்கு குறைபிரசவத்தில் குழந்தை பிறப்பது மற்றும் அரிய நிகழ்வாக குழந்தை பிறப்பதற்கு முன் இறப்பதும் உண்டு. கர்ப்பிணிகள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவர்களுக்கு பாது காப்பானது.

கருவுற்ற நாளில் இருந்து எப்போது வேண்டுமானாலும் கர்ப்பிணிப் பெண்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x