Published : 07 Jul 2021 03:14 AM
Last Updated : 07 Jul 2021 03:14 AM

ஊரடங்கில் தளர்வுகளைத் தொடர்ந்து - குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா? : தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

தென்காசி

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டபோது சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இதனால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இருப்பினும் குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், குற்றாலம் வியாபாரிகள் சாரல் காலத்தில் இரண்டாம் ஆண்டாக வாழ்வாதாரம் இழந்துள்ளனர். குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் குற்றாலம் அருவிப் பகுதிகளில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் ஆய்வு செய்தார். இந்நிலையில்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x