Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM
சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட அலுவலக கூட்டரங்கினை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ர மணியம் நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட உதவிகளை வழங்கினார். சிதம்பரம் வர்த்தக சங்கம், செஞ்சிலுவை சங்கம், தன்னார்வலர்களால் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு 25 மின்விசிறிகள் அளிக்கப்பட்டன.இவைகளை மாவட்ட ஆட்சியர், அரசு தலைமை மருத்துவரிடம் வழங்கினார். இதை தொடர்ந்து 3 பயனாளிகளுக்கு இலவச மனைபட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு இந்திராகாந்தி முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார். பின்னர் சின்ன அண்ணாகுளத்தை தூர் வாரி கரைகள் பலப்படுத்தும் பணியினை ஆட்சியர் தொடக்கி வைத்தார். திட்ட இயக்குநர் பவன்குமார், ஜி.கிரியப்பனவர், சார்- ஆட்சியர் மதுபாலன், அரசுமருத்துவமனை தலைமைமருத்துவர் அசோக்பாஸ் கர்,வட்டாட்சியர் ஆனந்த், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சின்ன அண்ணாகுளத்தை தூர் வாரி கரைகள் பலப்படுத்தும் பணி தொடங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT