Published : 04 Jul 2021 03:13 AM
Last Updated : 04 Jul 2021 03:13 AM

குறிஞ்சிப்பாடியில் ஒரு மாதத்தில் 410 டன் எள் விற்பனை :

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்த சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பொது முடக்கத்துக்கு பின்னர் ஜூன் 7-ம் தேதி முதல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை விற்பனை கூடத்தில் ரூ. 3 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள, 410 மெட்ரிக்டன் எள் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். தற்போது 80 கிலோ கொண்ட எள் மூட்டை தரத்துக்கு ஏற்ப ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை விலை போகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விருதுநகர், வெள்ளக்கோவில், கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி போன்ற வெளியூரைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x