Published : 10 Mar 2021 03:13 AM
Last Updated : 10 Mar 2021 03:13 AM

திமிரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க முப்பெரும் விழா :

திமிரி ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா, உலக மகளிர் தின விழா மற்றும் தேசிய அறிவியல் தின வார விழா என முப்பெரும் விழா நேற்று முன்தினம் பிற்பகல் நடை பெற்றது.

திமிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வட்டார வள மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புரவலர் தமிழ்மணி தலைமை தாங்கினார். திமிரி கிளை தலைவர் லோகநான் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் துளிர் தொகுப்பு நூலை ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு வெளியிட வட்டார கல்வி அலுவலர்கள் சண்முகானந்தபாபு, முருகன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பூபாலன், புரவலர் கருணாநிதி, தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆற்காடு கோட்டச் செயலாளர் பாரிமன்னன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், திமிரி ஒன்றியச் செயலாளர் வெங்கட்ராமன் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x