Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு வரும் 27-ல் நேர்காணல்

கால்நடை பராமரிப்புத் துறை கோவைமண்டல துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல், கோவை டாடாபாத் தில் உள்ள மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் வரும் 27-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரையிலும், மார்ச் 3-ம் தேதி கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அலுலகத்திலும் நடைபெறுகிறது.

இதற்கான அழைப்புக் கடிதம், அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட நாளில், உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள், கால்நடைப் பராமரிப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x