Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM

போதையில் தாயை கொலை செய்த மகன் கைது

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே மது போதையில் தாயைக் கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.

ரெட்டியார்சத்திரம் அருகே தோப்பம் பட்டியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (71). தனியாக வசித்தார். இவரது மகன் ரத்தினவேல் (47). அதே ஊரில் மனைவி, குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். தாய், மகன் இடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது. இதனால் அவ்வப்போது தாயுடன் தகராறு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மது போதையில் தாயுடன் மீண்டும் தகராறு செய்து தாக்கியதில் முத்தம்மாள் மயக்கமடைந்தார். அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதில் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ரெட்டியார்சத்திரம் போலீஸார் ரத்தினவேலைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x