Published : 06 Dec 2020 03:17 AM
Last Updated : 06 Dec 2020 03:17 AM

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினர்.

திருச்சி

டெல்லியில் நடைபெறும் விவசாயி களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவு மான அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமை வகித்துப் பேசி னார். ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கரூரில்...

கரூர் பேருந்து நிலைய ரவுண் டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ தலைமையில் மாநில விவசாய அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், செயலாளர் மணி, திமுக மாநில சட்ட துறை இணை செயலாளர் என்.மணிராஜ், குளித்தலை எம்எல்ஏ இ.ராமர், நகர பொறுப்பாளர்கள் கணேசன், எ.பி.கனகராஜ், பி.சரவணன், ராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் துரைசாமி, ராஜ் குமார், ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமு.மதிய ழகன், அண்ணாதுரை உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில்...

புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொறுப்பா ளர்கள் எஸ்.ரகுபதி எம்எல்ஏ, கே.கே.செல்லபாண்டியன் ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில், எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, சிவ.வீ.மெய்யநாதன், நகர செய லாளர் நைனாமுகமது உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

அரியலூரில்...

அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித் தார். நகரச் செயலாளர் ரா.முருகேசன், சட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுபா.சந்திர சேகர்,கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அ.பெருநற்கிள்ளி, முன்னாள் எம்எல்ஏ பாளை.அமரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். இதில், எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முன்னாள் அமைச் சர் உபயதுல்லா, எம்எல்ஏக்கள் எம்.ராமச்சந்திரன், டி.கே.ஜி.நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமையில் எம்எல்ஏக்கள் சாக் கோட்டை க.அன்பழகன், கோவி.செழியன் உள்ளிட்டோரும், பட்டுக்கோட்டையில் கோட்டாட்சி யர் அலுவலகம் முன் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி ப.பாலசுப்பிரமணியன் தலைமை யில் முன்னாள் எம்எல்ஏ அண்ணா துரை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை, நாகையில்...

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமை வகித்தார். இதில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, நாகை அவுரித் திடலில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை யில் எம்எல்ஏ மதிவாணன், முன்னாள் எம்எல்ஏக்கள் காமராஜ், வேதரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x