Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM

கூட்டுக் குடிநீர் திட்ட அலுவலகம் முன் போராட்டம்

திருச்சி மாவட்டம் முத்தரசநல் லூரில் உள்ள ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்ட அலுவலகம் முன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கும் முழு ஊதியத்தையும் ஒப்பந்ததாரர் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். பணி நேரத்தை 2 ஷிப்டுகளில் இருந்து 3 ஷிப்டுகளாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு சார்ந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால், யூனியன் மாநிலச் செயலாளர் மலைராஜன், மாவட்டச் செயலாளர் மருதராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் வினோத்மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x