Published : 16 Nov 2020 03:13 AM
Last Updated : 16 Nov 2020 03:13 AM

தீபாவளியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.17.52 கோடிக்கு மது விற்பனை

தீபாவளியை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.17.52 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நகர்ப் புறங்களில் 71 கடைகள், கிராமப் புறங்களில் 112 கடைகள் என மொத்தம் 183 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.4 கோடிக்கு மதுபான விற்பனை இருக்கும். பண்டிகை நாள் மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் மதுபான விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவ.13-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் ரூ.9.17 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றது. இது, சராசரி மதுபான விற்பனையை விட ரூ.5.17 கோடி அதிகம். அதேவேளையில், தீபாவளி நாளான நேற்று முன்தினம் திருச்சி மாவட்டத்தில் ரூ.8.35 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றது. இது, சராசரி மதுபான விற்பனையைவிட ரூ.4.35 கோடி அதிகமாக இருப்பினும், தீபாவளிக்கு முந்தைய நாள் விற்பனையைவிட ரூ.82 லட்சம் குறைவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x