Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

வீட்டில் 15 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் பிரிவு சாலை பகுதியில் வசித்து வருபவர் ரஹ்மானியா. இவரது கணவர் வெளி யூரில் வேலை பார்த்துவரு வதால், தனது தாயார் மற்றும் பிள்ளைகளுடன் ரஹ்மானியா வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தூங்கி எழுந்து நேற்று காலை பார்த்த போது, வீட்டின் பின்பு றக் கதவை உடைத்து, வீட்டிலிருந்த 15 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம், 50 புடவைகள் என ரூ. 8 லட்சம் மதிப் புடைய பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x