Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM
தெலங்கானா மருத்துவத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் நிவாச ராவ் ஹைதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒமைக்ரான் தொற்று குறித்து சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனை மக்கள் நம்ப வேண்டாம். இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் கரோனா (ஆர்டிபிசிஆர்) பரிசோ தனை செய்யப்படும்.
இதற்காக ஹைதராபாத் விமான நிலையத்தில் இரவு முதல் (நேற்று) 24 மணி நேர ஆர்டிபிசிஆர் மையம் ஏற்பாடு செய்யப்படும். இதுவரை 13 நாடுகளில் இருந்து வந்த 40 பேரை பரிசோதித்தோம். யாருக்கும் தொற்று உறுதியாகவில்ைல.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment