ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கங்குலி

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கங்குலி
Updated on
1 min read

அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனு மதிக்கப்பட்டிருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, 2-வது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார்.

கடந்த மாதம் 2-ம் தேதி கங்குலிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ளஉட்லேண்ட்ஸ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு அடைப்பு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு கடந்த7-ம் தேதி வீடுதிரும்பினார்.

இந்நிலையில், கங்குலிக்கு கடந்த 27-ம் தேதி 2-வது முறையாகலேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அங்கு கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டு இதய ரத்தக் குழாயில் கூடுதலாக இரு ஸ்டென்ட்களை பொருத்தினர். தொடர்ந்து இரு நாட்கள் கண்காணித்ததில் கங்குலி உடல்நிலை சீராக இருந்ததால் நேற்று மருத்துவமனையில் இருந்து கங்குலி வீடு திரும்பினார்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை மூத்த மருத்துவர் அஸ்வின் மேத்தா கூறும்போது “கங்குலி தற்போது நலமுடன் இருக்கிறார். அவரின் இதயமும் சீராக இயங்குகிறது. அடுத்த சில நாட்களில் வழக்கமான பணிகளை கவனிக்கலாம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in