Published : 01 Jun 2023 06:04 AM
Last Updated : 01 Jun 2023 06:04 AM

கிண்டியில் அரசு புதிய மருத்துவமனையை குடியரசு தலைவர் ஜூன் 15-ல் திறந்து வைக்கிறார்

சென்னை: கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் 15-ம் தேதி திறந்து வைக்கிறார். சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தரை தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில், இதயம், நுரையீல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்டபல்துறை சிகிச்சைகள், 1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

‘கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதிகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.

இதற்காக அரசின் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கும் பணி, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இச்சூழலில், குடியரசுத் தலைவரின் வெளிநாடு பயணத்தால், மருத்துவமனை திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மருத்துவமனையை 15-ம் தேதி குடியரசுத்தலைவர் திறந்து வைக்கவுள்ளார். திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x