Published : 26 May 2023 06:08 AM
Last Updated : 26 May 2023 06:08 AM

நூலகத் துறையின் ‘தமிழ்நாடு - டாக்’ நிகழ்ச்சி: சென்னையில் இன்று நடைபெறுகிறது

சென்னை: மருத்துவர்கள் பிரகாஷ் ஆம்தே மற்றும் மந்தாகினி ஆம்தே ஆகியோர் பங்கேற்கும் ‘தமிழ்நாடு-டாக்’ நிகழ்ச்சி சென்னையில் இன்று (மே 26) நடைபெறுகிறது.

இதுகுறித்து பொது நூலக இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலகளவில் புகழ்பெற்ற பல்வேறு துறை நிபுணர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் உரைகள் மிகச்சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அரங்க அமைப்புடன் ‘தமிழ்நாடு-டாக்’(Tamil Nadu Talk) எனும் பெயரில் நடத்தப்படும்.

இணைய வழியில் உலகெங்கும் உள்ள தமிழர்களைச் சென்றடையும் வகையில் இந்த திட்டம்ரூ.37.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு-டாக் நிகழ்ச்சிகள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக 4-வது தமிழ்நாடு-டாக் நிகழ்ச்சி அண்ணா நூலகத்தின் கலையரங்கில் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ரமோன் மகசேசே விருது பெற்ற பிரகாஷ் ஆம்தே மற்றும் மந்தாகினி ஆம்தே ஆகியோர் பங்கேற்று ‘Odyssey of Community Service: A Personal Reflection’ என்ற தலைப்பில் உரையாற்றி பார்வையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். விருப்பமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த நிகழ்ச்சி அண்ணா நூலகத்தின் யூடியூப் தளத்திலும் (http://www.youtube.com/ACLChennai) நேரலையில் ஒளிபரப்பப்படும். மருத்துவர்களான பிரகாஷ் ஆம்தே மற்றும் மந்தாகினி ஆகிய இருவரும் மகாராஷ்டிராவின் ஹேமல்காசா கிராமத்தில் உள்ள மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x