Published : 19 May 2023 12:29 PM
Last Updated : 19 May 2023 12:29 PM

மதிப்பெண்கள் மட்டுமே மனிதனை மதிப்பீடு செய்யாது: அமைச்சர் அன்பில் மகேஸ்

அமைச்சர் அன்பில் மகேஸ் | கோப்புப் படம்

சென்னை: மதிப்பெண்கள் மட்டுமே மனிதனை மதிப்பீடு செய்யாது என்ற பள்ளிக் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளோடு 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

"மதிப்பெண்கள் மட்டுமே மனிதனை மதிப்பீடு செய்யாது" எனும் முதல்வரின் வார்த்தைகளை மனதில் நிறுத்தி தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள வேண்டும்! அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x