Last Updated : 11 May, 2023 06:45 PM

 

Published : 11 May 2023 06:45 PM
Last Updated : 11 May 2023 06:45 PM

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 மருத்துவர் பணியிடங்கள் காலி: நோயாளிகள் அவதி

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என 230-க்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் தற்போது 200-க்கும் குறைவான மருத்துவர்களே பணிபுரிந்து வருகின்றனர்.

இதனால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முப்பதுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வரும் மருத்துவர்கள் உடனடியாக மாறுதலில் சென்றுவிடுகின்றனர். இல்லாவிட்டால் மாற்றுப்பணியில் மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

தொடர்ந்து இதேநிலை நீடிப்பதால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையை சரி செய்ய முடியாதநிலை உள்ளது. இதேபோல் புறநோயாளிகள் பிரிவில் பெரும்பாலும் பயிற்சி மருத்துவர்களே பணியில் உள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை கிடைப்பதில்லை. இதனை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.'

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x