Published : 11 May 2023 06:36 PM
Last Updated : 11 May 2023 06:36 PM

அம்மா உணவகம் வருவோரிடம் சென்னை மாநகராட்சி ஆய்வு: 2.13 லட்சம் பேர் கருத்து தெரிவிப்பு

அம்மா உணவகம் | கோப்புப் படம்

சென்னை: அம்மா உணவகம் வருவோரிடம் சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் 2.13 லட்சம் பேர் தங்களின் கருத்தை தெரிவித்து உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், காலை இட்லி, மதியம் கலவை சாதம், இரவு சப்பாத்தி என, மலிவு விலையில் உணவுகள் விற்கப்படுகின்றன. இதனால், ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, 20 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடக்கிறது. அதேநேரம், 120 கோடி ரூபாய் ஆண்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

அம்மா உணகவங்கள் துவங்கியபோது இருந்த வரவேற்பு, தற்போது குறைந்து வருகிறது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அம்மா உணவகத்தை யார், யார் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கண்டறிய சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில், அம்மா உணவத்துக்கு சாப்பிட வருபவர்களின் பெயர், சாதிப் பிரிவு , எந்த வேலை செய்பவர், தமிழகத்தை சார்ந்தவரா, வெளி மாநிலங்களைச் சார்ந்தவரா, எப்போது அம்மா உணவகத்தில் உணவு அருந்துகின்றனர் என்பன உள்ளிட்ட 21 கேள்விகள் அடங்கிய ஆய்வை சென்னை மாநகராட்சி நடத்தியுள்ளது.

ஒரு மாதத்திற்கு மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 2.13 லட்சம் பேர் பங்கேற்று தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்த ஆய்வு குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அவை, விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வறிக்கையின் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் சில பரிந்துரைகள் வழங்கப்படும். தமிழக அரசின் முடிவைப் பொறுத்து, அம்மா உணவகங்களில் ஏற்படும் நஷ்டம் தவிர்க்கப்படும்." என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x