Published : 08 May 2023 11:38 AM
Last Updated : 08 May 2023 11:38 AM

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் | விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் ராணிப்பேட்டை

விருதுநகர் மாவட்டம் | கோப்புப் படம்

சென்னை: 12-ம் வகுப்பு தேர்வில் விருதுநகர் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 97.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 97.79 சதவீதத்துடன் திருப்பூர் 2-வது இடத்தையும், 97.59 சதவீதத்துடன் பெரம்பலூர் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 87.30 சதவீதத்துடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்து இருந்தது. மேலும், விருதுநகர் 2-வது இடத்தையும், ராமநாதபுரம் 3வது இடத்தையும் பிடித்து இருந்தது. 86.69 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்து இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x