Published : 05 May 2023 06:16 AM
Last Updated : 05 May 2023 06:16 AM

வண்ணாரப்பேட்டையில் இன்று முதல் சுரங்கப்பாதை பணிக்காக போக்குவரத்து மாற்றம்

சென்னை: வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜாநகர் வரை மாநகராட்சி சார்பில் சுரங்கப்பாதை அமைப்பதால் அப்பகுதிகளில் இன்றுமுதல் (மே 5) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு:

கண்ணன் ரவுண்டானாவிலிருந்து வெளியே செல்லும் வாகனங்கள் கண்ணன் தெரு வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்ணன் ரவுண்டானாவிலிருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இருசக்கர வாகனங்கள் பரசுராமன் தெரு - தர்மராஜா கோவில் தெற்குப் பாதை வழியாக கண்ணன் சாலையை சென்றடையலாம்.

கண்ணன் ரவுண்டானாவிலிருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும்இலகுரக மோட்டார் வாகனங்கள் திருவெற்றியூர் சாலை - எம்.எஸ்.நாயுடு தெரு - சின்ன முனுசாமி தெரு வழியாக கண்ணன் சாலையை அடையலாம்.

போஜராஜா நகர் செல்ல விரும்பும் கனரக வாகனங்கள் சிபி ரோடு -கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் - கண்ணன் தெரு - போஜராஜா நகர் ரயில்வே கேட் வழியாக போஜராஜா நகரை அடையலாம். கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானா வழியாக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கண்ணன் தெருவில்இருந்து கண்ணன் ரவுண்டானாவுக்குச் செல்ல விரும்பும் வாகனங்கள் சின்ன முனுசாமி தெரு - எம்.எஸ். நாயுடு தெரு - சாலை வழியாககண்ணன் ரவுண்டானாவை அடையலாம் என்று அறிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x