Published : 26 Apr 2023 10:51 AM
Last Updated : 26 Apr 2023 10:51 AM

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

பிரகாஷ் சிங் பாதல்

சென்னை: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய பிரகாஷ் சிங் பாதல் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்து அம்மாநில நலனில் மிகுந்த பற்று கொண்டவராகத் திகழ்ந்தவர் பிரகாஷ் சிங் பாதல். அவரது பங்களிப்புகளை அம்மாநில மக்கள் மட்டுமல்ல; இந்திய மக்கள் அனைவருமே எந்நாளும் நினைவுகூர்வர். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், பஞ்சாப் மாநில மக்களுக்கும், சிரோமணி அகாலி தளம் கட்சியினருக்கும் தமிழக மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x