Published : 20 Apr 2023 04:16 AM
Last Updated : 20 Apr 2023 04:16 AM

நிவேதா கலை, கைவினை கழகத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் ஓரிகாமி பயிலரங்கு

QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதன் மூலமாக பதிவு செய்யலாம்.

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை மற்றும் கைவினைக் கழகத்துடன் இணைந்து, இணைய வழியில் நடத்தும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் வரும் ஏப்.28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி, 3 நாட்கள் நடைபெற உள்ளது.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அனைவருக்கும் பயன்படும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை இணைய வழியில் தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வருகிறது.

8 வயதுக்கு மேற்பட்டோர்..: அதன் ஒரு பகுதியாக, ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கு 3 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்த பயிலரங்கு வரும் ஏப்.28, 29, 30 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய 3 நாட்களும் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 8 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். ஓரிகாமி பயிலரங்கை நடத்த உள்ள நிர்மல் குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓரிகாமி பயிற்சிகளை திறம்பட நடத்தி வருபவர். இந்த பயிலரங்கில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகளை அவர் கற்றுத்தர உள்ளார்.

இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/origami என்ற லிங்க்கில், 3 நாட்களுக்கும் சேர்த்து ரூ.353/- (ஜிஎஸ்டி உட்பட) மட்டும் பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x