Published : 19 Apr 2023 11:33 AM
Last Updated : 19 Apr 2023 11:33 AM

காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் இரண்டு குழந்தைகளான விஜய் (7) மற்றும் பூமிகா (4) ஆகிய இருவரும் ஏப்.17-ம் தேதி (திங்கள்கிழமை) மாலையில் நெல்வாய் ஏரியில் எதிர்பாராத விதமாக விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறார்களின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x