Published : 19 Apr 2023 05:54 AM
Last Updated : 19 Apr 2023 05:54 AM

சித்தா பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நடந்த சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படுமென 2021-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அறிவித்து, சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

அதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக வைத்திருந்தார். அதில் சில விளக்கங்களை கேட்டிருந்தார். அதற்கு தகுந்த பதில் தெரிவிக்கப்பட்டது.

விளக்கங்களுக்குப் பதில்: இந்நிலையில், மீண்டும் சில விளக்கங்களை கேட்டார். அதற்கும் தகுந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வேண்டுமென்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஆளுநர் ஏற்க வேண்டும். தமிழக சுகாதாரத்துறைக்கு கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு முதல்வரின் வழிகாட்டுதல்படி சுகாதாரத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x