Published : 19 Apr 2023 06:06 AM
Last Updated : 19 Apr 2023 06:06 AM

திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் 3 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் அங்கேரிபாளையத்தில் கடந்த ஆண்டு நவ.11-ம் தேதி உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த கபீர் உசேன் (35), ஆசாத் மியா (29), ரஷீத் மொல்லா (30) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், 3 பேரும் சிறையில் இருந்த காலத்தை கழித்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியோடு 3 பேரையும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனதீர்ப்பளித்தார். அதுவரை அவர்கள் 3 பேரையும் திருச்சி வெளிநாட்டினர் முகாமில் போலீஸாரின் பாதுகாப்புடன் தங்க வைக்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு அரசு வழக்கறிஞர் எஸ்.கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x