Published : 30 Mar 2023 07:02 AM
Last Updated : 30 Mar 2023 07:02 AM

இரண்டாம் நிலை காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு

கோப்புப்படம்

சென்னை: இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் தேர்வுமுடிவுகள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 3,552 இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான காவலர் பொதுத் தேர்வுக்கான அறிவிப்புகடந்த ஆண்டு ஜூன் 30-ல் வெளியிடப்பட்டது.

15,718 பேர் பங்கேற்பு

இத்தேர்வுக்கு 3 லட்சத்து66,728 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எழுத்துத் தேர்வு கடந்தஆண்டு நவ.27-ல் நடைபெற்றது.சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி தேர்வுக்கு 18,672 பேர்அழைக்கப்பட்டனர். கடந்த பிப்.6முதல் 11-ம் தேதி வரை நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட தேர்வுகளில் 15,718 பேர் கலந்து கொண்டனர். இத்தேர்வு முடிவுகள் இன்று(மார்ச் 29) வாரியத்தின் இணையதளமான http://www.tnusrb.tn.gov.in/-ல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x