Published : 25 Mar 2023 05:36 PM
Last Updated : 25 Mar 2023 05:36 PM

ப்ரீமியம்
மதுரை நிகழ்வு முதல் ராகுல் ‘உறுதி’ வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 25, 2023

‘சட்ட நீதியும், சமூக நீதியும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’: மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை ரூ.166 கோடியில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புகள் வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவில் 4.90 கோடி வழக்குகள் நிலுவை: கிரண் ரிஜிஜு: ‘இந்தியாவில் 4 கோடியே 90 லட்சம் நிலுவை வழக்குகள் உள்ளன. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய சட்ட அமைச்சர் "தமிழகத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நீதித் துறை கட்டமைப்பு சிறப்பாக உள்ளது” என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x