Published : 23 Mar 2023 04:05 AM
Last Updated : 23 Mar 2023 04:05 AM

ரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில், நோன்புதொடங்குவதற் கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார். இந்நிலையில், நாளை மார்ச் 24-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மார்ச் 22-ம் தேதி ரமலான் மாதபிறை தமிழகத்தில் தென்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை (மார்ச் 24-ம் தேதி) அன்று ரமலான் மாதம் தொடங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x