Published : 12 Apr 2014 11:33 AM
Last Updated : 12 Apr 2014 11:33 AM

ஈரோட்டில் மோடி 16-ல் பிரச்சாரம்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து, மொடக்குறிச்சியில் நடந்த பிரச்சாரத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசியதாவது:

இந்த தேர்தலில் தேச விரோதிகளை வெற்றி பெற வைக்கக் கூடாது. நாட்டை பாதுகாக்க, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, வரும் 16-ம் தேதி ஈரோட்டில் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் பங்கேற்கிறார். மோடியை வெற்றி பெற வைக்க கட்சி வித்தியாசம் பார்க்காமல், வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x