Published : 27 Feb 2023 06:42 PM
Last Updated : 27 Feb 2023 06:42 PM

மார்ச் 20-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

பேரவைத் தலைவர் அப்பாவு | கோப்புப்படம்

சென்னை: 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழக சட்டமன்றப் பேரவை விதி 26 (1)ன்படி, 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை வரும் மார்ச் மாதம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.

தொடர்ந்து 2023-24ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையினை மற்றும் 2022-23-ம் ஆண்டுக்கான இறுதி கூடுதல் மானியக் கோரிக்கையினையும் நிதியமைச்சர், மார்ச் 28-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். மார்ச் 20-ல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு, அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x