Published : 27 Feb 2023 05:50 PM
Last Updated : 27 Feb 2023 05:50 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 5 மணி வரை 70.58% வாக்குப்பதிவு: 2021-ஐ விட அதிகம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்த முதியவர்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை 5 மணி வரை 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 2 மணி நேரத்தில் வாக்குப்பதிவு 11.3 சதவீதம் அதிகரித்து, 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பதிவானவதைவிட கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலில் வாக்களிக்க 2.27 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தற்போது, மாலை 5 மணி வரை 70.58% வாக்குப் பதிவாகி உள்ளது. இதன்படி 1 லட்சத்து 60 ஆயிரத்து 603 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். 77,181 ஆண்கள் மற்றும் 83,407 பெண்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மதியம் 1 மணி வரை 55.56% வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் அடுத்த 2 மணி நேரத்தில் வெறும் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி பொதுத்தேர்தலின்போது 66.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x