Published : 16 Feb 2023 04:14 PM
Last Updated : 16 Feb 2023 04:14 PM

“தமிழர்களுக்கு துரோகம் செய்வோருக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வி கிடைக்கும்” - கனிமொழி

ஈரோடு கிழக்கு தொகுதி 39-வது வார்டில், மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த பெண்களுக்கு எம்.பி கனிமொழி சால்வை அணிவித்து வரவேற்றார்.

ஈரோடு: “தமிழகத்திற்கு எதிராக இருப்பவர்களுக்கும், தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய அத்தனை பேருக்கும் இந்தத் தேர்தலில் தோல்வி கிடைக்கும்” என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எம்.பி. கனிமொழி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 39-வது வார்டில் மாற்றுக் கட்சியில் இருந்து 214 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். மிகப்பெரிய ஒரு வெற்றியை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் அன்பு கட்டளை இட்டுள்ளார். நிச்சயமாக அதுவும் நடக்கும் என்பது மக்களைக் காணும்போது தெரிகிறது.

மக்கள் தொடர்ந்து தங்களுக்குள் பல குழப்பங்கள் உள்ள யாருக்குமோ, தமிழகத்தை வடக்கில் இருக்கும் நமக்கு எதிரான மாற்று சக்திகளுக்கு அடகு வைக்கக் கூடியவர்களுக்கு இடமளித்து விடக்கூடாது என மிகத் தெளிவாக உள்ளார்கள்.

தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகளுக்காக பாடுபடக்கூடிய, குரல் கொடுக்கக்கூடிய திமுக ஆதரவைப் பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி மிகப் பெரிய, சிறப்பான வெற்றியாக இருக்கும். தமிழகத்திற்கு எதிராக இருப்பவர்களுக்கும், தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய அத்தனை பேருக்கும் இந்தத் தேர்தலில் தோல்வி கிடைக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x