Published : 06 Feb 2023 06:56 AM
Last Updated : 06 Feb 2023 06:56 AM

வானிலை முன்னறிவிப்பு: 4 நாட்களுக்கு வறண்ட வானிலை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துவிட்டது. தற்போது தமிழகத்தைச் சுற்றி மழை தரக்கூடிய காற்று சுழற்சி ஏதுமில்லை.

எனவே, பிப். 6, 7, 8, 9-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x