Published : 15 Jan 2023 04:03 AM
Last Updated : 15 Jan 2023 04:03 AM

கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் சேவை தொடக்கம்: தென் மாவட்ட மக்களிடையே வரவேற்பு

பிரதிநிதித்துவப் படம்

உடுமலை: உடுமலை சுற்று வட்டாரத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளுக்கு ரயில் சேவை இல்லை. அதனால் பேருந்துகளை நம்பியே பயணிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பழநி பக்தர்களின் வசதிக்காக, கடந்த 13-ம் தேதி முதல் வரும் 18-ம் தேதி வரை கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முன் வந்தது. அதன்படி, காலை 11 மணிக்கு உடுமலை ரயில் நிலையம் வரும் சிறப்பு ரயில், பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சந்திப்பை அடைகிறது.

இந்த ரயில் மூலமாக திண்டுக்கல் செல்லும் பயணிகள், அங்கிருந்து அடுத்த 25 நிமிடத்தில் வரும் கோவை - நாகர் கோவில் ரயிலை பிடிக்கலாம். அதன் மூலமாக மதுரை, விருதுநகர், சாத்தூர்,கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் வரை செல்லலாம். இதனால், தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x