மின் ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு: தொழிற்சங்கங்கள் இன்று முக்கிய ஆலோசனை

மின் ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு: தொழிற்சங்கங்கள் இன்று முக்கிய ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: மின் வாரிய ஊழியர்களுக்கு 2019 டிசம்பர் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை விரைந்து வழங்கக் கோரி, ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால், போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இதுதொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க மின் வாரியம் ஒப்புக் கொண்டது. மேலும், ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பொங்கல் பரிசாக ஓய்வூதியர்களுக்கு ரூ.500 வழங்கவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, 5 சதவீத ஊதிய உயர்வு குறித்து மின்வாரியம் வழங்கியுள்ள கருத்துரு தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இதில், ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in