Published : 23 Dec 2022 01:46 PM
Last Updated : 23 Dec 2022 01:46 PM

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

கோப்புப் படம்

சென்னை: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (டிச.23) வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கு பிறகு, நாளை (டிச.24) முதல் ஜன.1-ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் விடுமுறை முடிந்து ஜன. 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.

இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு அசைன்மென்ட் மட்டும் அளிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x