Published : 15 Dec 2022 06:15 AM
Last Updated : 15 Dec 2022 06:15 AM

பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 7-வது வந்தே பாரத் ரயில் பணி தொடக்கம்

சென்னை: சென்னை ஐசிஎஃப்-ல் 7-வது வந்தேபாரத் ரயில் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டுபிப்ரவரிக்குள் இதைத் தயாரித்து,வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு, டெல்லி-வாரணாசி, டெல்லி-காத்ரா இடையே இயக்கப்படுகின்றன. இதுபோல, அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் 4 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில், 5-வது வந்தேபாரத் ரயில், தென்னிந்தியாவில் மைசூர்-சென்னை இடையேவும், 6-வது வந்தே பாரத் ரயில் பிலாஸ்பூர்-நாக்பூர் இடையேவும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஐசிஎஃப்-ல்7-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: 7-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணியைத் தொடங்கி உள்ளோம். இந்த ரயிலிலும் அதிநவீனதொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும். பிப்ரவரி மாதத்துக்குள் தயாரித்து வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த ரயிலை, தென் மத்தியரயில்வேயில் விசாகப்பட்டினம்-செகந்திராபாத் இடையே இயக்கரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். அடுத்த ஆண்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களைத் தயாரித்துஇயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x