Published : 13 Aug 2022 07:20 AM
Last Updated : 13 Aug 2022 07:20 AM

தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியமலை அறிவிப்பு: முதல்வர் மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “உலக யானைகள் தினத்தில், தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியமலை அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. காணுயிர்ச் சூழலமைப்புகளின் சமநிலையைப் பேணுவதில் யானைகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இயற்கையின் கொடையான இந்த மிடுக்குமிகு பாலூட்டிகளை எவ்விலை
கொடுத்தேனும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x