Published : 02 Aug 2022 09:00 AM
Last Updated : 02 Aug 2022 09:00 AM

வைகையில் 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் கடந்த 27-ம் தேதி 62.95 அடியாக இருந்த நீர்மட்டம் தொடர் நீர்வரத்தினால் 30-ம் தேதி 66 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருந்ததால் நேற்று மாலை 68.5 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

69 அடியை எட்டியதும் மூன்றாவது எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்படும். தற்போது விநாடிக்கு 3,134 கனஅடி நீர்வரத்தும், 69 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x