Published : 13 Jul 2022 12:20 PM
Last Updated : 13 Jul 2022 12:20 PM

நன்றி அப்பா - குரு பூர்ணிமா தினத்தில் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த குஷ்பு

சென்னை: குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

குரு பூர்ணிமா இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் பாஜக தலைவர் குஷ்பு முன்னாள் முதல்வர் கருணாநதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " இன்று குரு பூர்ணிமா 2022 முன்னிட்டு, என்னை அரசியலுக்கு அழைத்து வந்து, மனிதநேயம், சமத்துவம், அரசியல் கருணை, எப்போதும் சுயமரியாதையை விட வேறெதுவும் பெரிதல்ல ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்த ஒருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். டாக்டர் கலைஞர் அவர்கள் எப்போதும் நினைவுகூறப்படுவார், என் பார்வையில் எப்போதும் உயர்ந்த மரியாதையுடன் இருப்பார். நன்றி அப்பா” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x