Published : 08 Jul 2022 09:00 AM
Last Updated : 08 Jul 2022 09:00 AM

ஈரோடு | அரசுப் பள்ளிக்கு ரூ.9 லட்சத்தில் பணி - முன்னாள் மாணவியருக்கு பாராட்டு

ஈரோடு சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 33 ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலை ஆசிரியை பயிற்சி பெற்ற மாணவிகள் இணைந்து, ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வளாக தரையை புதிதாக அமைத்து அழகுபடுத்தியுள்ளனர்.

இப்பணியை மேற்கொண்ட முன்னாள் மாணவியருக்கு, தலைமை ஆசிரியை தாட்சாயினி தலைமையில் பாராட்டு விழா நடந்தது. முன்னாள் தலைமை ஆசிரியர்கள் எம்.திருஞானம், சி.ஆறுமுகம், முன்னாள் தமிழாசிரியர் தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைமைஆசிரியர் க.பெ.ராமையா கல்வெட்டினை திறந்து வைத்து கடந்த காலத்தில் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியை பயிற்சி மாணவிகள் மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தங்காயாள், முன்னாள் ஆசிரியர்கள் திருமலைசாமி, நடராஜ், ஆசிரியர் என்.ராமசாமி, டேவிட் சுகுமார், எழுத்தர் பி.சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x