Published : 13 Jun 2022 06:50 AM
Last Updated : 13 Jun 2022 06:50 AM

திமுக எல்லை மீறுகிறது: பாஜக துணைத் தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் மதுரை ஆதீனம் தொடர்பான செய்தி வெளியானது. இதற்குப் பதில் அளித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை:

மதுரை ஆதீனத்தை மீண்டும் மிரட்டியுள்ளது திமுக. அக்கட்சி எல்லை மீறி செல்கிறது. பாஜகவின் பொறுமைக்கும் எல்லை உண்டு.இந்து கடவுள்கள், நம்பிக்கைகளை அவதூறு செய்வோரை தண்டிக்காமல், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சர்கள், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகின்றனர்.

இந்து மதத்திற்கு எதிராகப் பேசும் கூட்டணிக் கட்சியினரை திமுக அடக்குவதில்லை. இனியும்இதையெல்லாம் பாஜக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. சட்டம் தன் கடமையை செய்யும்என்பதை திமுக புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x